Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் யுத்தம் ஏற்படாமல் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்போம்! ஜனாதிபதி

December 2, 2016
in News, Politics
0

மீண்டும் யுத்தம் ஏற்படாமல் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்போம்! ஜனாதிபதி

எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய நோக்கில் தேசிய பிரச்சினை தீர்வுக்கான செயற்பாடுகளை சீர்குலைக்க முற்பட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேர்மையான வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி; எதிர்ப்பு நடவடிக்கைகள் நாட்டை மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தன் போன்ற சிறந்த தலைவர் ஒத்துழைப்பு வழங்கும் சிறந்த தருணமிது என குறிப்பிட்ட ஜனாதிபதி; தவறான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

நாட்டில் நல்லிணக்கம், ஐக்கியம் ஏற்படாவிடின் நாட்டை சோகத்தில் ஆழ்த்திவிடும்.எமது நாட்டிலுள்ள பிரச்சினைகளும் இன்று நேற்றைய பிரச்சினைகளல்ல. பல தசாப்தங்களாக தொடர்பவை.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த அனைத்துத் தலைவர்களும் இந்த பிரச்சினையைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளான பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்றவை பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைகூடவில்லை.

பௌத்த பிக்குகளே கிளர்ந்தெழுந்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தமை வரலாற்றில் குறிப்பிடக்கூடிய விடயம்.

இத்தகைய எதிர்ப்புகளினால் பிரச்சினை முற்றி மோதல்களுக்கு வழிவகுத்ததுடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.

கடந்த காலங்களில் அமைச்சர்களை நியமிக்கும் போது வடக்கு, கிழக்கிற்கு எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதைக் கவனித்தால் அபிவிருத்திக்கான பின்னடைவிற்கு அதுவே சிறந்த உதாரணமாகும்.

ஜே. ஆர். ஜெயவர்தன – ராஜிவ்காந்தியுடன் மேற்கொண்ட இந்திய, இலங்கை உடன்படிக்கையும் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனது.

அதே போன்றே இப்போதும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் மிக மோசமாக பேசப்படுகிறது.

இத்தகைய போக்குகள் மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கே வழிவகுக்கும்.

ஜே. ஆர் – ராஜிவ் ஒப்பந்தத்தின் 13 வது திருத்தத்தினூடாக மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்தன. இது தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பிரச்சினையாக மாறியது.

இதனால், எமது நாட்டவர் பெரும்பாலானோர் இடம்பெயர இது காரணமாகியது. இன்றும் எமது மக்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.

இது எமது நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கும் விடயம் என்பதை நாம் உணர வேண்டும்.

பிரேமதாச போன்ற சிறந்த தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் யுத்தம் பலி கொண்டுள்ளது.

யுத்த வெடிச் சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நாட்டைப் பிளவுபடுத்தும் சிந்தனையைத் தோற்கடிக்க இதுவரை முடியாமற் போயுள்ளது.

சர்வதேச ரீதியில் நிலவும் இந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் உறுதிப்படுத்தப்படும்.புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த யுகங்களைப் போன்றே அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது மிக மோசமான கணிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய பிரச்சினையை பயன்படுத்துவோர் ஒருபோதும் தமது நோக்கத்தை அடைய முடியாது.

அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க சதிசெய்வது நாட்டின் எதிர்காலத்தை அதள பாதாளத்திற்குத் தள்ளுவதாகும்.

அரசாங்கம் மிக நேர்மையாக செயற்பட்டு வருகிறது. சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை இலக்காகக் கொண்டு செயற்படும் போது அதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்.

பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். 50, 60 களின் பிரதிபலனே யுத்தத்துக்கு வழிவகுத்தது. தீர்வுகளில் சம்பந்தப்படுவோர் நம்பிக்கையுள்ளவர்களாக வேண்டும்.

இத்தகைய, செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிர்காலத்தில் அதிகாரம் கிடைக்கப் போவதில்லை.

நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக இப்போது விமர்சிக்கும் மஹிந்த ராஜபக்ச 13வது திருத்தம் அல்ல 13 ற்குப் போவதாக ஐ. நா. செயலாளரிடம் உறுதியளித்ததை குறிப்பிட விரும்புகிறேன்.

தேசத்துரோகியாக நாம் செயற்படுபவர்களல்ல, மாறாக தேசத்தை நேசிப்பவர்கள். தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண சிறந்த தருணம் இது.

எதி்ர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இதற்கு ஒத்துழைக்கும் சிறந்த தலைவர்.பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். காலம் தாமதிப்பது எமக்கும் பாதிப்பாகும்.

மேடைகளில் வீர வசனம் பேசி விமர்சனங்களில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

24 வருடங்கள் வடக்கில் அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலை மிகவும் கொடியது.

தெற்கு மக்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

வடக்கு மக்கள் கேட்பது அவர்களது காணிகளையே. அது அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.

நியாயமற்ற பிரசாரங்களை விடுத்து நியாயமாக பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுங்கள்.

மீண்டும் யுத்தம் ஏற்படாமல் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Tags: Featured
Previous Post

தமிழீழம் உருவாகிவிட்டது! பொலிஸ்மா அதிபரின் மௌனம் இதை உணர்த்துகின்றது? பெரிய சந்தேகம்

Next Post

அதிரடி அறிவிப்பு..! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் ஜனாதிபதி!

Next Post
அதிரடி அறிவிப்பு..! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் ஜனாதிபதி!

அதிரடி அறிவிப்பு..! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் ஜனாதிபதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures