துருக்கியை தாக்கியுள்ள இரண்டாவது பூகம்பம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ரொய்ட்டரின் வீடியோவொன்று இரண்டாவது பூகம்பம் நிகழ்ந்த தருணத்தை பதிவு செய்துள்ளது.
நேரலையில் ஈடுபட்டிருந்தவேளை கட்டிடமொன்று இடிந்துவிழுவதையும் ஊடக பணியாளர்கள் அச்சத்துடன் ஒடுவதையும் பாரிய சத்தமொன்று கேட்பதையும் பின்னர் புகைமண்டலம் எழுவதையும் அவதானிக்க முடிகின்றது.
முதலாவது பூகம்பத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளை மலட்யா நகரில் பதிவு செய்துகொண்டிருந்தவேளை தங்களிற்கு அருகிலிருந்த கட்டிடமொன்று சரிந்து விழுந்தது என யுக்செல் அகலன் என்ற நிருபர்தெரிவித்துள்ளார்.
மக்கள் அலறிக்கொண்டு வீதிக்கு ஒடுவதையும் இடிபாடுகளையும் அவதானிக்க முடிகின்றது.