மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பிலான நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் அறிவிக்கும்போதே இந்த தகவலை வெளியிட்டார்.
சட்ட மூலம் தொடர்பான மனுவை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரும்பவில்லை என மனுதாரர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகள் திருத்தம் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல எனவும் அரசியலமைப்பின் 12/04 அத்தியாயத்திற்கிணங்க சமத்துவத்திற்கான உரிமை ஏற்பாடுகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் இது தொடர்பிரல் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.