யாழ்ப்பாணம் சாவகச்சேரி, பொலிஸ் பிரிவில் கடந்த 4 நாள்களுக்குள் மணல் மற்றும் மரக்கடத்தல்களில் ஈடுபட்ட 5 உழவியந்திரங்கள் மற்றும் பாரவூர்தி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தனங்கிளப்பில் இருந்து நுணாவிலுக்கு 4 உழவியந்திரங்களில் மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என்று கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
மணல் கடத்தியவர்கள் பொலிஸாரைக் கண்டதும் உழவியந்திரங்களை கைவிட்டுத் தப்பித்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்று சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கேம்.எம்.கே. கோணார தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம் இன்றி பாரவூர்தி மற்றும் உழவியந்திரங்களில் கடத்தப்பட்ட மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

