ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் ராஜபக்ஷாக்களில் ஒருவரா? அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களா? என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அது எமது எதிரணியிலுள்ள எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே. பின்னர் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்து யார் வேட்பாளர் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி அமைத்தால், ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க வேண்டி வந்தால் என்ன? தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்கும் என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்தார்.