தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சருடன் பேசி தமது பிரச்சினைகளுக்கு 2 வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு காணப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.