இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று (14) காலை 10.00 மணிக்கு நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த நீதிமன்றம் அமையவுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு மூவர் கொண்ட மூன்று விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நீதிமன்றமே இன்று திறந்து வைக்கப்படுகின்றது.