ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
திறந்த மனதுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கருத்து முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. திருமணம் பேசுவதைப் போன்றுதான் இந்தப் பேச்சுவார்த்தையும். சிலபோது சீதனம் தொகை அதிகமாக இருக்கின்றது எனத் தெரிவித்து சிலர் கருத்து முரண்பாடு கொள்வார்கள். பின்னர் அதனையும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொண்டு திருமணம் வரை நகர்ந்து சென்று திருமணத்தை நடாத்தி முடிக்கலாம் எனவும் அவர் விளக்கிக் கூறினார்.