Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி – ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

February 4, 2017
in News, Politics
0
மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி – ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி – ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் எப்படியாவது பிரதமராக பதவிக்கு வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றார்.

அப்படி அவர் பிரதமராக பதவிக்கு வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கீழ் அவர் பிரதமராக பதவி வகிக்க வேண்டும்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் இருந்து நோக்கினால் மகிந்த ராஜபக்ச காண்பது வெறும் கனவு. மைத்திரிபால ஜனாதிபதியாக இருக்கும் வரை மகிந்தவின் இந்த கனவு நனவாகாது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மைத்திரி முதலமைச்சர்களை மகிந்தவிடம் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். மகிந்தவை சந்தித்த முதலமைச்சர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

தனக்குள்ள பலம் குறித்த விடயத்தில் அதிகமான மதிப்பீட்டில் இருந்து வரும் மகிந்த, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினால், மைத்திரி தலைமையிலான கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக மகிந்த முதலமைச்சர்களிடம் கூறினார்.

ஆனால், தமிழ், முஸ்லிம் உட்பட சிறிய கட்சிகளின் ஆதவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருப்பதால் மகிந்த கூறுவதை எந்த வகையிலும் செய்ய முடியாது என்பதான் உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் இன்னும் நான்கு அல்லது 5 மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படலாம்.

அப்போது தமது பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பு அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் என்பது மாத்திரமல்ல மகிந்த ராஜபக்சவும் அவரது பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் நிரூபிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனை தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தை அளவிட இந்த தேர்தல் வாய்ப்பாக அமையும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதை மகிந்த மறுத்துள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் தேர்தலில் பலத்த போட்டி ஏற்படும்.

மைத்திரி தரப்பு ராஜபக்சவினரின் ஊழல், மோசடிகளை வெளிகொணரவேண்டும் இல்லையேல் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மகிந்த தரப்புடன் போட்டி போட முடியாமல் போகும்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த தரப்பும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை கைப்பற்றும் என்பதை மறுக்க முடியாது.

மைத்திரி தரப்பும் மகிந்த தரப்பும் தனித்து போட்டியிட்டு மோதிக்கொள்ளும் நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானதாகவே அமையும்.

மகிந்த தரப்பினரின் இனவாத நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி கவர உதவக் கூடும்.

மேலும் மகிந்த தரப்பு போர் வெற்றி, இனவாதம், பௌத்த தேசிய வாத கருத்துக்களை முன்வைத்து வருவதால், சிங்கள வாக்காளர்களில் பெரும்பான்மையான வாக்காளர்களை கவர முடியாது போகும்.

இனவாத மற்றும் பௌத்த தேசியவாத போக்குடைய குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியையே மகிந்த தரப்பால் தம் பக்கம் ஈர்க்க கூடியதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடு நிலையான மற்றும் இனவாதமற்ற நிலைப்பாடுகளை முன்வைத்து வரும் ஏனைய கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து செல்லும் என்பதால் மகிந்த ராஜபக்சவின் அரசியல் கணக்கு பிழைத்து போகலாம்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பிரதான தரப்பினருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசியல் ரீதியான முக்கிய தேர்தல் என்பது நிச்சயம்.

Tags: Featured
Previous Post

இலங்கையின் பிரதான சட்டதிட்டங்கள் முதன்முறையாக தமிழில் மாற்றம்!- சட்டக்கோவை பிரதமரிடம்

Next Post

கல்லறையாகிப் போன தமிழனின் பொக்கிஷம் ஆதாரத்தோடு.! – முழு உலகையும் ஆண்ட வீரத் தமிழர்கள்.!

Next Post
கல்லறையாகிப் போன தமிழனின் பொக்கிஷம் ஆதாரத்தோடு.! – முழு உலகையும் ஆண்ட வீரத் தமிழர்கள்.!

கல்லறையாகிப் போன தமிழனின் பொக்கிஷம் ஆதாரத்தோடு.! - முழு உலகையும் ஆண்ட வீரத் தமிழர்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures