Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது | மைத்திரி

November 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்துக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய எவருக்கும் தகைமை இல்லை.

பாராளுமன்ற தெரிவுக்குழு தோல்வியடைந்துள்ளது.ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை காலமும் பேசப்பட்ட விடயத்துக்கு உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஆளும் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக இந்த வழக்கு விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும்,நீதியரசர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்ய வும் பேசுகிறார்கள்.

நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தும் தகைமை இங்கு எவருக்கும் கிடையாது.பாராளுமன்ற தெரிவு குழுக்கள் தோல்வி என்பதற்கு பல விடயங்கள் சான்றாக உள்ளன.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துக் கொண்டிருக்காமல் உரிய தரப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தினால் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிப்பார்கள்.மிகுதியாக இருக்கும் கௌரவமும் இல்லாமல் போகும்.

பொருளாதார மீட்சிக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.அதன் சாபத்தையே இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பினால் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் வியாபாரம்,விபச்சாரம் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.இது சிறந்தொரு நிலையல்ல,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் -04 நிறுவனம் வெளியிட்ட காணொளிகள் வெறும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.

சனல் -4 வெளியிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம்

Next Post

வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவ‍ரை அடையாளம் காணப்படவில்லை!

Next Post
வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவ‍ரை அடையாளம் காணப்படவில்லை!

வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவ‍ரை அடையாளம் காணப்படவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures