இரத்தினபுரி ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐந்து பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.