வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் நாளை மாலை தீர்க்கமான பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் போதிய சம்பளத்தைப் பெற்று வரும் நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை நியாயமற்றது எனவும் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.