ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்தால், தான் மாற்று நடவடிக்கையில் கால் வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை (30) இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.