சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் சேதம் விளைவித்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர்
சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்
அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர் சிறிபாத என்று மாற்றப்பட்டது எனினும் பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது