கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, வான், கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
காரில் பயணித்த இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.