பக்கிங்ஹாம் அரண்மனையின் முன் உள்ள புல்வெளியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாழாக்கிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய மாகாராணி எலிசபெத் நகைச்சுவையாக குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் வந்த ஹெலிகாப்டர்கள் ஒரே நாளில் 2 முறை பக்கிங்ஹாம் அரண்மனை அருகே தரையிறங்கின.
இது அரண்மனையின் முன் உள்ள புல்வெளியில் ஆழமான தடங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், ட்ரம்பின் பயணத்துக்கு பின்னர் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரீசனிடம், எலிசபெத் ‘வந்து என் புல்வெளியைப் பாருங்கள், அது பாழாகிவிட்டது. ட்ரம்ப் தான் காரணம்’ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
ஸ்கொட் மொரீசனுக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.