வடக்கிலுள்ள புலிகள் தெற்கிலுள்ள பாதால உலகக் குழுக்களை வைத்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் கொலை செய்ய சதி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனால், இருவரினதும் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றது. ஆனால், உண்மையில் நிலைமை அவ்வாறல்ல எனவும் மேலும் கூறினார்.