பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன் என கூறிக் கொண்டே இருந்தவர், இரண்டு வாரங்களுக்கு முன் பிக்பாஸில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்தார். இவர் என்ட்ரியானதில் இருந்தே அவ்வப்போது சில கலகங்கள் நடந்து கொண்டே இருந்தன. இந்தவாரம் கஸ்தூரிக்கும், வனிதாவிற்குமே நேரடியாக மோதல் ஏற்பட்டது.
இந்தவாரம் நாமினேஷனில் சேரன், கஸ்தூரி, சாண்டி மற்றும் முகேன் உள்ளனர். இவர்களில் கஸ்தூரி இந்தவாரம் வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.