நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸாருடன் இராணுவத்தினர் மற்றும் அதிரடி படையினர் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டனர்.
நாளைய தினம் பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இச்சோதனை மேற்கொண்டதாகவும் இதனால் மக்கள் எவ்வித அச்சம் கொள்ளவேண்டியதில்லை எனவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.