ஈரானின் தீவிரவாதிகளைஇலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் ஈரான் எல்லையிலுள்ள தீவிரவாத குழுக்களின் தளங்களை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதலைபாக்கிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
ஈரானின் சியஸ்டன் ஓபலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட துல்லியமான தாக்குதல்களை பாக்கிஸ்தான் மேற்கொண்டுள்ளது என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்க் பார் சர்மசாச்சார் என்ற புலனாய்வை அடிப்படையாக கொண்ட நடவடிக்கையின் போது பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை ஈரான் மேற்கொண்ட தாக்குதலை பாக்கிஸ்தான் கடுமையாக கண்டித்திருந்தது.