டொக்டர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலையை ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்திசயாலை போன்ற அரச தனியார் இணைந்த போதனா வைத்தியசாலையாக முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு கடுவலை மற்றும் மாலபே போன்ற குடியிருப்புப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்காக, சகல வசதிகளைக் கொண்டதான வைத்தியசாலையாக டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை செயல்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொழும்பு கிழக்கு ஆதார வத்தியசாலையுடன் (முல்லேரியா வைத்தியசாலை) இணைந்ததாக, டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையாக நடாத்துவதற்காக, சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.