உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமாக சில வாகனங்கள் எரியூட்டப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.