பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தை தெளிவாக பெற்றுக் கொள்ளும் வரையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல், தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பீ.சீ. பெரேராவுக்கு இவ்வாறு அதிகாரத்தை வழங்குவதற்கு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுள் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும், அதிகாரத்தை வழங்கும் கடிதத்திலும் அவர் ஒப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.