பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையின் பெறுமதியை ஜனாதிபதியே அறிந்து வைத்துள்ளார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டணியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப் பக்கத்துக்கு எடுப்பதற்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதியே வழங்கினார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது பொது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை இல்லாமல் செய்துள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.