பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் முடிவு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் நேற்று (12) காலை முதல் 10 இற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் நேற்றைய தினமே மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் சுயாதீன அமைப்புக்களும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.