யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க ளுக்கு என்ன நடந்தது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து, பிரச்சினைகள், யோசனைகள், தீர்மானங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் கோரப்பட்டிருந்தன.
வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தான் சமர்பித்துள்ள பிரச்சினையாக, கடந்த கால ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்தது, அவற்றுக்கு என்ன முடிவு காணப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.இந்த விடயம், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்படவுள்ளது.