தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பி.க்கள் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதித் தீர்மானத்தினை எடுத்திருக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.