தனக்கு அரசியலில் ஓய்வு பெற வேண்டிய எந்தவிதமான தேவையும் இல்லையெனவும், தான் தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதனால், தனக்கு இன்னும் நாட்டுக்காக பணியாற்ற முடியுமாகவுள்ளதாகவும் ஜனாதிபதி பொலன்னறுவையில் வைத்து கூறினார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வருவதாகவும் அறிவிக்கவில்லை. இதனால், ஜனாதிபதித் தேர்தலுடன் நான் ஓய்வு பெறப் போவதாக சிலர் நினைக்கலாம். அடுத்த டிசம்பர் மாதத்தின் பின்னர் நான் புதுவடிவத்தில் ஒரு முன்னெடுப்பை எடுக்கவுள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.