அரசாங்கத்துடன் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாகவும், இச் சந்திப்பில் உடன்படிக்கை செய்வது தொடர்பில் திகதி தீர்மானிக்கப்படுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பெற்றோலிய வள, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராகவே இருப்பார்.மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும், மக்கள் எதிர்பார்க்கும் ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவாரென்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் மற்றும் கூட்டணி உடன்படிக்கையை கைச்சாத்திடும் தினம் என்பன தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.