ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையேயான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொது செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் ஒன்று கூடினர்.
இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு எதிர்வரும் 10 தினங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.