ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமாகும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கூட்டத்தின்போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய நிபந்தனைகள், கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நேற்று முன்தினம் சஜித் தரப்பிலிருந்து தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.