ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையிலேயே அவர் நேற்று தனது கடிதத்தை கையளித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்திற்கும் இடையில் கடும் போட்டி நிகழ்கிறது.
இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளார்.