ஸ்விட்சர்லாந்து நகரான ஜெனிவாவில் நடைபெறும் ஐநா.மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக் கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், கண்டனம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான பலூசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிந்தி இன மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து கடுமை காட்டி வருவதாக கண்டனம் தெரிவித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பலூசிஸ்தான் மக்கள் இம்ரான்கானுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி பாகிஸ்தானின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தினர். காஷ்மீர் சிறுபான்மை மக்களைப் பற்றி புகார் கூறும் பாகிஸ்தான் பிரதமரின் முகத்துக்கு நேராக வைத்து விமர்சனம் செய்யப்பட்டதுடன் ஆக்ரமிப்பு பகுதியில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.