முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு மாத்திரமே முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவருக்கு மரண தண்டனை நியமிக்கப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சியின் சிலருடைய தேவைக்கு ஏற்ப எனவும், அவரை மீண்டும் விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தினால் முடியாதமையால், அவருக்கு விடுதலை வழங்க ஜனாதிபதியினால் மாத்திரமே முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (07) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.