ஈரானின் தெஹ்ரானிலுள்ள இமாம் கொமெய்னி விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 180 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு படபியினர் தொடர்ச்சியான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.