சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தெரிவிக்கையில் ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக விளங்கும் தீபச்செல்வன் அவரின் நூலினை பாதுகாப்பு அமைச்சும் சுங்கத்திணைக்களமும் சேர்ந்து தடுத்து வைத்திருக்கின்றது.
சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கூட இரின் ஆக்கங்கள் வாசிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு கூட செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு எழுத்தாளரின் நூலானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிங்கள எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் கலாசார அலுவல்கள் அமைச்சில் விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் விடுவிப்பது தொடர்பாக ஒரு தீர்வும் எட்டப்படவில்லை எனவே குறித்த நூலை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



