சீனாவினால் பிரச்சினைக்குரியவராக கருதப்படுபவரும் தாய்வானின் இறைமை ஆதரவு ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
2020 முதல் தாய்வானின் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் லாய்சிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சீனாவின் கொள்கைக்கு எதிராக இறைமையுள்ள தாய்வானையும் தேசிய அடையாளத்தையும் முன்னிறுத்தும் அரசாங்கம் தொடர்ந்து தாய்வானை ஆட்சிபுரியும் நிலையை உருவாக்கியுள்ளது.
லாய்சிங்கிற்கு 40 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
சீனாவுடனான எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் 19.5 மில்லியன் மக்கள் இன்று வாக்களித்துள்ளனர்..
. ஜனாதிபதி வில்லியம் லாய் பிரச்சினைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்துள்ள சீனா அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.