ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சனிக்கிழமை (13) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்தில் ‘எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்னும் தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்த உள்ளார்.
அதனையடுத்து இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதேநேரம், சுவிட்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதோடு பல்வேறு நாடுகளில் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களிலும் பங்கேற்கவுள்ளார்.
குறித்த மாநாட்டினை நிறைவு செய்துகொண்டு அவர் எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.