இயக்குனர்கள், நடிகர்கள் என, பலருக்கும் வாய்ப்பளித்த ராவுத்தர் பிலிம்ஸ், எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்ற புதிய படத்தை தயாரிக்கிறது.
இப்ராஹிம் ராவுத்தரின் மகன், முகமது அபுபக்கர் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர், கவிராஜ் இயக்குகிறார். நாயகனாக, ஆரி, நாயகியாக சாஷ்வி பாலா நடிக்கின்றனர்.
படம் குறித்து, சாஷ்வி பாலா கூறுகையில், ” நான், இலங்கையைச் சேர்ந்தவள் என்பதால், தமிழ் நன்றாகப் பேசுவேன்.
வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வர, பின் என்ன நடக்கிறது என்பது தான், இப்படத்தின் கதை. நிச்சயமாக ரசிகர்களுக்கு, வித்தியாசமான விருந்தாக இப்படம் இருக்கும்,” என்றார்.