தனிப்பட்ட ஒரு அமைச்சரினால் உருவாக்கப்பட்டதே இந்த 118 பேர் பணம் பெற்ற சம்பவம் எனவும், இது அவரின் மானத்தை மறைக்க மேற்கொண்ட நடவடிக்கை எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
118 பேர் பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் குறித்து அவரிடம் வினவப்பட்ட போதே இதனைக் கூறினார்.
இந்த நடவடிக்கையினால் சம்பந்தப்பட்ட எம்.பி.யும் சேற்றைப் புசிக் கொண்டதுதான் மிச்சம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்