இராஜினாமா செய்துள்ள திலங்க சுமதிபாலவின் பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
வெற்றிடமாக இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதவிக்கு சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் எம்.பியும், ஐ.தே.க. சார்பில் மொனராகலை பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியும், ஒன்றிணைந்த எதிரணி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்து புள்ளேயும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய வாக்கெடுப்பில் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வெற்றிபெற்றால் பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெறுவார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.