கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் சரியத்தொடங்கிவிட்டது. அவர் கைவசம் இருக்கும் படங்களில் சொல்லிக் கொள்ளும்படியான படம் இப்போது விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்து வரும் ‘துப்பாகி முனை’ என்ற படம்தான்.
தமிழில் இந்தப்படத்தில் மட்டும் நடித்து வரும் ஹன்சிகா முன்னணி ஹீரோக்களின் படம் வரும் என காத்திருந்தார். ஆனால் தேடி வந்ததோ அறிமுக இயக்குநர் ஜமீல் என்பவர் இயக்கும் படம்தான்.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படமாம். புதிய ஒரு ரூட்டில் பயணிக்கும் வகையில் இந்தப்படத்தில் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் ஹன்சிகா.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது.