விஜய் டி.வி.யில் தொகுப்பாளர்களாக பணியாற்றிய பலரும் தொடர்ச்சியாக சினிமாவுக்குச் செல்வது வாடிக்கையாகி இருக்கிறது. டி.டி., ரம்யாவை தொடர்ந்து ஜாக்குலினும் அந்த வரிசையில் இணைந்து, கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். நயன்தாராவின் தங்கை கேரக்டரில் நடித்தார்.
அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். இதனால் மீண்டும் அவர் டி.வி. சீரியல் பக்கம் திரும்பினார். அவர் தேன்மொழி பி.ஏ., என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த தொடர் தொடர்பாக புரமோஷன் வேலைகள் நடந்தன. முன்னதக, தேன்மொழி பி.ஏ., சீரியலில் நடிக்கும் ஜாக்குலின், சீரியலில் திருமண கோலத்தில் இருப்பது போல போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. சீரியலில் எடுத்த உடன் கல்யாணம் பண்ணி கொண்டு நடிக்கிறீர்களே என் கேள்விக்கு ஜாக்லின் அளித்த பதில் இது தான்.
35 வயதில், நடிகைகள், என்னதான் சினிமா என்றாலும், பள்ளி மாணவிகள் போன்ற பாவாடை அணிந்து நடிக்கின்றனர். நடிகைகள் இப்படியெல்லாம் செய்யலாம். ஆனால், 23 வயதான நான், திருமண கோலத்தில் நடித்தால் என்ன. எந்த மாதிரியான வேடம் என்றாலும் மனதிற்கு பிடித்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.
ஜாக்குலின் எந்த நடிகைளை அப்படி சொல்கிறார். ஒரு வேளை இவரா, அவரா என புரியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.