ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தி சந்தியாக நடைபெறும் கூட்டங்களில் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லையெனவும், இக்கட்சி நீண்டகால பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு கட்சிக்கென்று சில ஒழுங்கு விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்ப உரிய நேரத்தில் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.