அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலையாகவுள்ளார்.
அவர் இன்று காலை 11.00 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை நிதியம் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முறைப்பாடு செய்திருந்தார்.
மாணவர்கள் எவ்வித நலனையும் பெற்றிராத சுரக்ஷா திட்டத்தின் ஊடாக 2300 மில்லியன் ரூபாய் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.