நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசீம் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.
குறித்த கூட்டத்தின்போது மின்சார விநியோக தடை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியினால் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கை மின்சார சபை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையே இந்த நிலைமைக்கான காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.