தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதக்கப்பட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஒன்றிணைந்த தாதியர் சங்கம் இந்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
அத்தோடு விபத்து உதவித்தொகையாக 10,000 ரூபாவை பெற்றுக்கொடுத்தல், சீருடைக்காக வழங்கப்படும் கொடுப்பனவை 25,000 வரை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தாதியர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருகைதரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.