இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக 4702 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவருடன் போட்டியிட்ட சட்டத்தரணி மஹிந்த லொக்குகே 1346 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இன்று தெரிவாகியுள்ளார்.