யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக மாறியிருந்து.
யாழ்பாணத்திலுள்ள தேவாலயத்தில் நடந்த வருடாந்த திருவிழாவின் போது இதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மாதகல் புனித லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.
திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது இரவு வேளையில் வானவேடிக்கை நிகழ்வுகள் நடைபெற்றது.
வண்ணமயமான வான வேடிக்கைகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.