மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதத்திலான அபிவிருத்தித் திட்டங்களின் பால் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.